டோக்கியோ: ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆபத்து நிறைந்த கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான மற்றும் உயரமான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
