கோயிலுக்கு சென்று திரும்பியபோது மரத்தில் கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி: சென்னையை சேர்ந்தவர்கள்

 

மயிலம்: சென்னை காரனோடை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55). இவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து காரில் விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். சாமி கும்பிட்டு விட்டு நேற்று மாலை சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். கார் மயிலம், தென் பசியார் அருகே அவ்வழியாக சென்ற மொபட் மீது கார் மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது.

இதில் காரில் பயணம் செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி திருப்பாவை, மருமகள் கல்பனா வள்ளி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் சென்ற வெங்கட்குமார், மிருதலாஸ்ரீ, சரவணன், பிருந்தா, அனன்யாஸ்ரீ மற்றும் மொபட் ஓட்டி வந்த மயிலம் அடுத்துள்ள தென்களவாய் கிராமத்தை சேர்ந்த செல்வம் (55) ஆகிய 6 பேர் படுகாயத்துடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: