வாழப்பாடி, ஜன.13: ஆணைமடுவு அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வாழப்பாடி அருகே, புளுதிக்குட்டை ஊராட்சி ஆணைமடுவு அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், ஆணைமடுவு அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். அதன்படி, ஆணைமடுவு அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்காடு எம்எல்ஏ சித்ரா, வாழப்பாடி ஒன்றியக்குழு தலைவர் சதீஷ்குமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவிதா, ராணி, விஜயராகவன், பாட்ஷா மற்றும் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.