நெல்லை, ஜன. 13: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வளாக நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த அப்பலோ டயர்ஸ் கம்பெனி, ரானே மெட்ராஸ் நிறுவனம் சார்பில் வளாக நேர்காணல் நடந்தது. சென்னையைச் சேர்ந்த அப்பலோ டயர்ஸ் கம்பெனி மனித வளத்துறை அலுவலர்கள் நாராயன் தேவராஜ், குகன்நாதன் , ஹரி மற்றும் ரானே மெட்ராஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை அலுவலர்கள் கிருஷ்ணழூர்த்தி, மாதவன் உள்ளிட்டோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தினர்.