அரசு நிவாரணம் வழங்க வேண்டுகோள் பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ ரகுபதி வழங்கினார்

பொன்னமராவதி,ஜன.12: பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருமயம் எம்எல்ஏ ரகுபதி வழங்கினார். பொன்னமராவதியில் அட்சயா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பொங்கல்பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு சங்க மாநிலத்தலைவர் காசிம் தலைமை வகித்தார். திருமயம் எம்எல்ஏ ரகுபதி பொங்கல் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, ஊனமுற்றோர்கள் என்பதை மாற்றுத்திறனாளிகள் என அழைத்து அதனையே சட்டமாக்கியவர் கலைஞர். திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய சலுகைகள் செயல்படுத்தப்பட்டது. நடைபெறஉள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகள் வாழ்வு செழிக்கும் என்றார். நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, மாவட்ட பிரிதிநிதி சிக்கந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திமுக நகர செயலாளர் அழக்கப்பன், மாவட்ட துணை செயலாளர் சின்னையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: