ஆண்டிபட்டி, ஜன. 12: ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் வீடுகளிலும், விசைத்தறி கூடங்களிலும் சேலைகளை நெய்து வருகின்றனர். இதில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். கடந்த முறை போடப்பட்ட ஒப்பந்தம் டிச.31ல் முடிந்தது. இதனால், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த, விசைத்தறி தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு 13 சதவீத கூலி உயர்வு தர விசைத்தறி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நுால் வாங்கி சேலை உற்பத்தி செய்பவர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை.