பொள்ளாச்சி, ஜன.11: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மீண்டும் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் பகல், இரவு என தொடர்ந்து போக்குவரத்து மிகுந்த இரு பஸ் நிலையம் மத்தியில் உள்ள டிராபிக் சிக்னல் பகுதி, கோவை ரோடு காந்தி சிலை பகுதி, தேர்நிலை உள்ளிட்ட பல இடங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் எரிய செய்யப்பட்டு பின் மறுநாள் காலையில் அணைக்கப்படுகிறது. ஆனால், சில இடங்களில் உள்ள மின்கோபுரத்தில் உள்ள விளக்குகள் எரிவதில்லை. இதில் வியாபார நிறுவனம், மக்கள் நடமாட்டம், போக்குவரத்து மிகுந்த இடமான மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு சந்திப்பு திருவள்ளுவர் திடலில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டது.