கோவை, ஜன.11:கோவை புலியகுளம் காந்திநகரை சேர்ந்தவர் 29 வயது பெண். இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த பக்கத்து தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தவறாக பேசி அநாகரிகமாக நடந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அந்த வாலிபரிடம் இது குறித்து கேட்பதற்காக தனது சகோதரியுடன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.