கோவை, ஜன.11: ஜல்லிக்கட்டில் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்க பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பிசியோதெரபி மருத்துவ சங்கத்தினர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர். ராஜேஸ் கண்ணா வெளியிட்டுள்ள அறிக்கை: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளின் பாதுகாப்பிற்காக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால், மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி ஆய்வு, உயிர்காக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் ஆண்டு தோறும் உயிர் இழப்புகள் மற்றும் காயங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மாடுபிடி வீரர்களுக்கு பிசியோதெரபி மருத்துவர்கள் பரிந்துரையோடு உயிர் காக்கும் கவசங்களான வயிற்று கவசம், நெஞ்சு கவசம், சீறுநீரக கவசம், கை, கால் பாதுகாப்பு கவசம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.