வேலூர், ஜன. 7: காட்பாடி அருகே குடிசை வீட்டை அபகரிக்க உறவினர்கள் முயற்சிப்பதாக, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இரு மகன்களுடன் தாய் கண்ணீர் மல்க மனு அளித்தார். காட்பாடி அடுத்த லத்தேரி கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி மனைவி ரேணுகாதேவி. இவர் தனது 2 ஆண் குழந்தைகளுடன் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் அதிகாரியிடம் கண்ணீர் மல்க அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிச்சாண்டி மனநிலை பாதிக்கப்பட்டவர். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் மாற்றுத்திறனாளி. எனது கணவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது அரசு சார்பில் பசுமைவீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த எனது கணவரின் உறவினர்கள் சிலர், பசுமை வீடு கட்ட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.