பெரம்பலூர்,ஜன.6:செட்டிக்குளம் சின்ன வெங்காய வணிக வளாகத்தில் நடை பெறும் ஏலத்தில் விவசாயிகள் தங்களது வெங்காயத்தினை விற்று பயன்பெற லாம். என பெரம்பலூர்கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூ மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,செட்டிகுளத்தில் மலைக்கோவில் அரு கே, ஆலத்தூர்கேட் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் வணிக வளாகம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.114.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 27ம்தேதியன்று தமிழகஅரசால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வெங்காய வணிக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சின்ன வெங்காயத்திற்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட ஏலத்தில் இ துவரை 10,362 விவசாயிகள் தாங்கள் விளைவித்த 2250.12 மெட்ரிக்.டன் சின்ன வெங்காயத்தினை ஏலத்திற்கு கொண்டு வந்து உரிய விலைக்கு விற்று பயன டைந்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.425.86 லட்சம் ஆகும்.