கோவை, ஜன.4: கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாேரா 2021’ நிகழ்ச்சியின் 3-ம் நாள் விழா ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவில் பாடகர் ராம் பரசுராம் கலந்து கொண்டு அருளாளர் கபீர்தாஸ் பற்றியும் மற்றும் அவர் இயற்றிய பாடல்களின் மகிமைகளை பற்றியும் பேசினார். இவ்விழாவில் பாடகர் ராம் பரசுராம் பேசியதாவது, ‘‘ஒரு விவசாயி தன்னுடைய விவசாய நிலத்தை மிருகங்களிடம் இருந்து எப்பி பாதுகாக்கிறாரோ, அதேபோல மனிதன் தன்னுடைய ஐந்து புலன்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த புலன்கள் மூலமாகத்தான் மனிதன் தவறு செய்யத் தூண்டப்படுகிறான். ஆகையால் இந்த ஐந்து புலன்களை கட்டுப்படுத்துவதற்கு தியானம் செய்ய வேண்டும்.