களக்காடு பகுதியில் ரூ.75 லட்சத்தில் தார் சாலை பணி

நெல்லை, ஜன. 1: களக்காடு பேரூராட்சி அம்பேத்கர் நகர், மேலக்கருவேலன்குளம். மஞ்சுவிளை பகுதியை சேர்ந்த மக்கள், தங்கள் பகுதிகளில் தார் சாலை அமைத்து தர வேண்டும் என ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதையடுத்து தார் சாலை பணிகளுக்காக ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று தார் சாலை அமைக்கும் பணியை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ ெதாடங்கி வைத்தார். இதில் களக்காடு செயல் அலுவலர் சுஷ்மா, பொறியாளர் சேதுராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் களக்காடு தெற்கு  ஜெயராமன், வடக்கு பூவரசன், நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் செயலாளர் செண்பகண்ணு, மாணவரணி இணை செயலாளர் சுரேஷ், ெஜ. பேரவை செயலாளர் பாபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் வேல்சாமி, நகர ஜெ. பேரவை செயலாளர் ஐசக்சாலமேன்,நாங்குநேரி ஒன்றிய துணை செயலாளர் சிவா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் துணை செயலாளர் இசக்கியப்பன், களக்காடு ஊராட்சி முன்னாள் செயலாளர்கள் தாஸ், கதிர்வேல், முருகன், உச்சினிமாகாளி, வார்டு செயலாளர்கள் லக்கிராஜா, முருகன் அதிசயமணி, மகளிரணி ஷீலாபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: