குமாரபாளையம், டிச.31: குமாரபாளையம் காவேரிநகர் புதிய பாலம் அருகே, லட்சுமிநாராயணா கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், இறைச்சி கடைகள் அத்துமீறி செயல்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, போலீசார் தலையிட்டு கறிக்கடைகளை அகற்றினர். இந்நிலையில், பராமரிப்பின்றி கிடந்த கோயில் நிலத்தில், விளையாட்டு மைதானம் அமைப்பதாக கூறி ஒரு தரப்பினர், பொக்லைன் மூலம் அங்கிருந்த மரம், செடிகளை அகற்றி சமன்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஎச்பி அமைப்பினர், கோயில் நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி எனக்கூறி, நாமக்கல் இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் தமிழரசனிடம் புகார் அளித்தனர்.