விருதுநகரில் 230 பேர் கைது ராஜபாளையத்தில் கபடி போட்டி திமுக எம்எல்ஏ பரிசு வழங்கினார்

ராஜபாளையம், டிச. 29: ராஜபாளையம் தொகுதி சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் புதிய நண்பர்கள் கபடிக்குழு மற்றும் இந்து நாடார் உறவின் முறை இணைந்து 3ம் ஆண்டு கபடி போட்டியை நடத்தினர். இறுதிப்போட்டியை நடத்தி முதல் பரிசு 15 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், விளையாட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க அரசு அலைக்கழிப்பு செய்கிறது. இதனால் இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வம் குறைகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் உடனடியாக அனுமதி வழங்கப்படும். விளையாட்டு திறனை ஊக்கப்படுத்த அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு திடல் அமைக்கப்படும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர் சின்னதம்பி தங்கப்பன் மற்றும் நிர்வாகிகள், கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: