பெரம்பலூரில் வரும் 24ஆம் தேதி மாவட்ட கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், அக்.18: பெரம்பலூர் மாவட்ட கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு கேஸ் சிலிண்டர்கள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள் மீது வரப் பெற்ற புகார் மனுக்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து, எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக கேஸ் நுர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24ஆம் தேதி மாலை 4 மணியளவில் பெரம்பலூர், மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், கேஸ் முகவர்கள் மற்றும் சம்பந்தப் பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கேஸ் நுகர்வோர் எரிவுாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின் மேற்படி, கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். கேஸ் விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் என்று கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: