போடி, டிச. 28: போடி ஜே.கே பட்டி, திருமலாபுரம், நகராட்சி சாந்திவனம், போடி பங்காருசாமி கண்மாய் அருகிலும் சலவைத்தொழிலாளர்கள் சலவைத்துறையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பங்காருசாமி கண்மாய் அருகில் வடக்குப்பகுதியில் இருந்த சலவைதுறையை கடந்த 10 ஆண்டுகளாக சலவைத்தொழிலாளர்கள் பயன்டுத்தாமல் விட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள தோட்ட நிலங்களோடு சலவைத்துறை இடமும் இணைக்கப்பட்டது. தற்போது அப்பகுதி தென்னை, வாழைதோப்புகளாக மாறி விட்டது.