அதிமுகவில் இருந்து விலகல் பஞ்., துணைத்தலைவர் திமுகவில் இணைந்தார்

நாமக்கல், டிச.28: மோகனூர் ஒன்றியம் என்.புதுப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நவீன்ராஜ், அதிமுகவில் இருந்து விலகி மாவட்ட பெறுப்பாளர் ராஜேஸ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து ராஜேஸ்குமார் வரவேற்றார். அப்போது, ஒன்றிய செயலாளர்கள் நவலடி, பாலசுப்பிரமணியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பூவராகவன், ராஜாகண்ணன்,  ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வீரமுத்து, ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேலுபாலாஜி, மகேஷ்குமார், திமுக நிர்வாகிகள் இளமதி, ராமலிங்கம், வரதராஜன், இளம்பரிதி, குணாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: