ஈரோடு, டிச. 28: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் மாரிமுத்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறையில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் புதியதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள இடம் முக்கியமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும்.