கும்பகோணம், டிச.27: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் ஆடுதுறையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்த ஆடுதுறை பேருந்து நிலையத்திற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்தனர;. அப்பொழுது அங்கு முன்கூட்டியே இருந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் தலைமையில் போலீசார் கயிறு கட்டி தடுத்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.