திருப்பூர்,டிச.25: பாரதிய கிசான் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் வேலுசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அவிநாசி அடுத்த தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஊராட்சி பகுதிகளில் சுமார் 890 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் மூலமாக தொழில் பூங்கா அமைக்க அளவீட்டு பணிகள் நடக்கிறது. இத்திட்டத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டத்தை அரசு கொண்டுவராது என சபாநாயகர் தனபால் உறுதியளித்தார்.