புதுச்சேரி: புதுச்சேரியில் 1891 விவசாயிகளுக்கு ரூ.1 கோடி பயிர் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து விருத்தாசலத்துக்கு ரயில் மூலம் 1340 டன் யூரியா உரம் வந்திறங்கியது. கடலூர் மாவட்டத்துக்கு 800 டன், விழுப்புரம் 400 டன் அரியலூருக்கு 150 டன் யூரியா கொண்டு செல்லப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நெல் பயிரிடுவதால் யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
