அரியலூர், டிச.24: அரியலூர் நகரில் மாவட்ட எஸ்பி சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட எஸ்பி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி அரியலூர் காமராஜர் திடலில் தொடங்கி சத்திரம், எம்ஜிஆர் சிலை வழியாக அண்ணா சிலையில் நிறைவடைந்தது. முடிவில் போராட்டம், கலவரத்தின் போது போலீசார் தடுத்தல், தாக்குதல், கைது செய்தல் குறித்து ஒத்திகை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்பி சீனிவாசனம், இம்மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலுக்கும், ரவுடிசத்திற்கும், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனைக்கு இடம் கிடையாது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினர் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.