ஈரோடு, டிச. 23: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூளை பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மினி கிளினிக்கினை திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், தென்னரசு, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல வீரப்பன்சத்திரத்தில் மினி கிளினிக், ராஜாஜிபுரத்தில் புதிய ரேஷன் கடை, பெரியவலசு நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.