சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

கரூர், டிச. 22: சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கரூர் மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கலாவதி தலைமை வகித்தார். இதில், மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏமான செந்தில்பாலாஜி, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி, குளித்தலை எம்எல்ஏ ராமர், மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், மாவட்ட துணைச் செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், ஏராளமான மகளிரணியினர், திமுகவினர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: