பேருதான்... ஜில் மசாஜ்... உள்ளே நடக்குது ‘உல்லாச விளையாட்டு’

கோவை, டிச.21: கோவை நகரில் ‘ஜில் மசாஜ்’ என்ற பெயரில் சில இடங்களில் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. ஆயுர்வேதம், மூலிகை, ஆயில் மசாஜ் என பலவகை மசாஜ் செய்வதாக ஆன்லைனில் அழைப்பு விடுத்து மசாஜ் சென்டர்கள் பரவலாகி இயங்கி வருகிறது. இதில் மசாஜ் பெயரளவிற்கு நடப்பதாகவும், அங்கே ஆண்களை மயக்கும் வகையிலான சேட்டை விளையாட்டுகள் அரங்கேறி வருவதாக புகார் வந்தது.

கணபதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பீளமேடு வி.கே.ரோட்டில் நடந்து சென்றபோது, மசாஜ் சென்டருக்கு ஒருவர் அழைத்தார்.

அவர், ‘‘மசாஜ் மட்டுமல்ல. நீங்கள் விரும்பும் வகையில் உல்லாசமாக இருக்கலாம்’’ என தெரிவித்தார். இதேபோல் மசக்காளி பாளையம் பகுதியில் வாலிபர் ஒருவர் சென்றபோது அவருக்கும் நேரடியான அழைப்பு வந்தது. இது தொடர்பாக இவர்கள் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் 2 மசாஜ் சென்டர்களுக்கு சென்றபோது அங்கே உல்லாச விளையாட்டுகள் அரங்கேறி வந்தது தெரியவந்தது.

மசாஜ் சென்டருக்கு வந்தவர்களை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், ‘‘தோல், நரம்பு, உடல் வலி போக்கும் வகையில் மசாஜ் செய்வதாக கூறினார்கள். 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் என தெரிவித்தார்கள். சில வகையில் ஆயில், ஆயுர்வேத மசாஜ் செய்த பின்னர், உங்களுக்கு ஜாலியாக இருக்க விருப்பமா? என இளம்பெண்களை விட்டு கேட்டார்கள்.

 நாங்கள் வேண்டாம் என கூறியபோது, உங்கள மாதிரி இங்கே வந்தவங்க உள்ளே ஜாலியாக இருக்காங்க. யாரும் உங்கள தொந்தரவு செய்யமாட்டாங்க என்றார்கள். இதுபோல் நீண்ட காலமாக நடப்பதாக தெரிகிறது’’ என்றனர். மசாஜ் சென்டரில் உல்லாச லீலைகளை நடத்திய கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த மோகன் (25), ஆர்.எஸ்,புரம் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்த மதன் கண்ணன் (31) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான புஷ்பா மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: