ஒப்பந்த ெதாழிலாளர்கள் பணி நீக்கம் கண்டித்து தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடி, டிச.18: பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த 14மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்காத சம்பளத்தை உடனடியாக வழங்கிடவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பிஎஸ்என்எல் மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிஎஸ்என்எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். தொலை தொடர்பு ஊழியர் சங்க தலைவர் பன்னீர்செல்வம் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில், மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: