சென்னை: அடிதடி வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவு அளித்துள்ளது. டி.எஸ்.பி. சங்கர் கணேஷை விடுதலை செய்யவும் மனுதாரருக்கு எதிரான விசாரணைக்கும் தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
