மக்கள் குறைதீர் கூட்டத்தில் 478 கோரிக்கை மனுக்கள் கலெக்டர் பெற்றார் நடவடிக்கை எடுக்க உத்தரவு

தஞ்சாவூர், செப் 9: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 478 மனுக்களை பொது
மக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.

இது குறித்து உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் மணிமாறன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: