பொன்னமராவதி அருகே ஆலவயலில் இலவச கண்சிகிச்சை முகாம்

பொன்னமராவதி, செப்.9: பொன்னமராவதி அருகே ஆலவயலில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கத்தலைவர் முத்தையா தலைமைவகித்தார். செயலாளர் சுப்பையா, பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவக்குழுவினர் ஆலவயல் மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த 101நபர்களுக்கு கண் பரிசோதனை செய்துள்ளனர். இதில் 45பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 30பேரூக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.நிர்வாகிகள் முருகானந்தம், பாலமுரளி, அன்புச்செல்வன், மகாலிங்கம்,கருப்பையா உட்படபலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து செய்திருந்தனர்.

 

Related Stories: