வால்பாறை, டிச.11: வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள நடைபாதையில் ஓராண்டிற்கு பிறகு மீண்டும் கடைகள் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளன. இக்கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள நடைபாதை, கடந்த 2019 நவம்பர் மாதம் டைல்ஸ் ஒட்டி அழகுபடுத்தப்பட்டது. பணிகள் முடிந்ததும் மீண்டும் கடைகளால் ஆக்கரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால், எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் சென்றதால் வால்பாறை நகராட்சி ஆணையாளர் மற்றும் வட்டாட்சியருக்கு மாவட்ட கலெக்டர், நடைபாதை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.