விளாத்திகுளம்,டிச.10: புரெவி புயல் தொடர் மழை காரணமாக புதூர் உட்பட விளாத்திகுளம் தொகுதியில் மானாவாரி பயிர்கள் சேதம் அடைந்ததையடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம் வேளாண் சேவைகள் திருத்தச்சட்டம் வேளாண்மை உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விளாத்திகுளம் தொகுதியில் உற்பத்திக்கு பெயர் பெற்ற குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும். மத்திய அரசினால் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்படியே பின்பற்றும் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. புதூர் பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதூர் மதிமுக ஒன்றியச் செயலாளர் எரிமலை வரதன் தலைமை வகித்தார்.