குடியாத்தம், டிச.7: குடியாத்தம் அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் சந்திரன்(65), தொழிலதிபர். இவரது மகள் சுபாஷினி, சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வருகிறார். இவரது படிப்பு தொடர்பாக மனைவி ரேவதி மற்றும் மகளுடன் கடந்த 3ம் தேதி சிதம்பரத்திற்கு சென்றிருந்த சந்திரன், நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவும், பீரோவும் உடைக்கப்பட்டு 31 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி, ₹3 லட்சம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், தனது பாதுகாப்புக்காக அனுமதியுடன் வைத்திருந்த ₹1 லட்சம் மதிப்பிலான கைத்துப்பாக்கி, 30 தோட்டாக்கள், வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ‘ஹார்டுடிஸ்க்கையும்’ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது.