கரூர், டிச. 4: கரூர் நகரப்பகுதிகளின் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி வளர்ந்துள்ள சீத்தை முட்செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் நகராட்சியில் தாந்தோணிமலை, ராயனூர், சணப்பிரட்டி, வேலுசாமிபுரம், இனாம்கரூர் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் நாளுக்கு நாள் குடியிருப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளன.இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காலியிடங்களில் அதிகளவு சீத்தை முட்செடிகள் வளர்ந்துள்ளன. நிலத்தடி நீர் மட்டத்தை பாதிப்பது போன்ற பல்வேறு விளைவுகளை இந்த செடிகள் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.