5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; தப்பியோடிய 2 பேருக்கு வலை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், அய்யனார் கோயிலுக்கு செல்லும் சாலையில், எஸ்.வளைவு என்னும் இடத்தில் வனக்காப்பாளர் பிரபு நேற்று காலை சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும்படியாக இருவர் சென்றனர். வனக்காப்பாளர் அவர்களை நிறுத்தி விசாரிக்க முயன்றபோது, அவர்கள் கையில் இருந்த சாக்கு மூட்டையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து வனக்காப்பாளர் சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்ததில் 5 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. உடனே இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தப்பி ஓடியவர்கள் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்த மாடசாமி, முத்துக்குமார் என தெரிந்தது. தப்பி ஓடியவர்கள் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு சென்றரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; தப்பியோடிய 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: