பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்

தென்காசி: தென்காசி பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளை ஏற்று பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கான நேரம் இரவு 8 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் பிரதான வாயில் வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: