கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன்பெற்று வருகின்றனர். கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் பலன் பெறுகின்றனர். நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். டெல்லியில் நடைபெறும் 17வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

The post கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: