2 இலங்கை விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பற்றாக்குறையால் 2 இலங்கை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து நேற்று அதிகாலை 2:10 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வரும் லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் வருகை விமானம், அதேபோல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:10 மணிக்கு, இலங்கை செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் புறப்பாடு விமானம் ஆகிய 2 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இந்த 2 விமானங்களில், பயணிக்க போதிய பயணிகள் இல்லாததால் இந்த இரு விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த விமானத்தில் பயணிக்க மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்திருந்தனர். அந்த பயணிகளுக்கு, வேறு விமானங்களில் பயணிக்க டிக்கெட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post 2 இலங்கை விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: