அதானி, அம்பானியின் சொத்து பல மடங்கு குவிந்திருக்கிறது. இதனால் பாஜவுக்கு தேர்தல் நிதி குவிகிறது. 2018 முதல் 2023 வரை அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ.9,200 கோடி. இதில் பாஜ பெற்றது மட்டும் ரூ.5,272 கோடி. இது 52 சதவிகிதம். மார்ச் 2023 பாஜ வங்கி கணக்கில் ரூ.3,596 கோடி டெபாசிட் இக்கிறது. ஆனால், 55 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் வங்கி கணக்கில் இருப்பதோ ரூ.162 கோடிதான். 2023 உலக பசி குறியீட்டின்படி 125 நாடுகளில் 111-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இத்தகைய அவலநிலைக்கு இந்தியாவை கொண்டு சென்று சாதனை படைத்தவர்தான் பிரதமர் மோடி. மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கடந்த ஒன்பதரை ஆண்டு ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதார பேரழிவுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.
The post 125 நாடுகளில் இந்தியாவுக்கு 111வது இடம்: மோடி அரசை சாடிய கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.