பழநி, செப்.29: வேளாண் மசோதாக்களை கண்டித்து பழநியில் திமுக கூட்டணி சார்பில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழநி பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக செயற்குழு உறுப்பினர் வேலுமணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் நகராட்சித் தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கந்தசாமி, திமுக நகர துணைச் செயலாளர் சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகர நெசவாளரணி அமைப்பாளர் பாஸ்கரன், பொறியாளர் அணி நிர்வாகி வீரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் பழனிச்சாமி, இந்திரா, முருகபாண்டியன், செபாஸ்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பழநி அருகே கோதைமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு யூனியன் தலைவர் ஈஸ்வரி கருப்புச்சாமி தலைமை வகித்தார்.