அரியலூர், மார்ச் 19: தேசிய புள்ளி விவரக்கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுநலக் கொள்கைகளை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் அரசாங்கம் புள்ளி விவரங்களை சேகரித்துப் பயன்படுத்துகிறது. தேசிய புள்ளி விவர அலுவலகமானது (nso) பொதுநல விவரங்களை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கிறது. தற்போதைய கணக்கெடுப்பில் ழிஷிளி உள்நாட்டு சுற்றுலா செலவினம், பல்நோக்கு குறியீடு ஆய்வு (வீடு கட்டப்பட்ட விவரம், நுகர்வு செலவு, வருவாய், வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் முதலியன) புள்ளி விவரங்களை கணக்கெடுப்பு செய்கிறது.