இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை விரைவில் கொள்முதல் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள மின்மயானத்தை திறக்க கோரி பாடை கட்டி ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டனர்

திருத்துறைப்பூண்டி, பிப்.25: திருத்துறைப்பூண்டியில் கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள மின் மயானத்தை திறக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேதை சாலையில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மின்மயானத்தை திறக்க வேண்டும், சிங்களாந்தி சுடுகாட்டுக்கு சாலை அமைத்து தர வேண்டும், ரயிலடி மேட்டுத்தெரு சாலையை இணைக்கும் 8 வது வார்டு முள்ளியாற்றங்கரை சாலையை அமைத்து தரவேண்டும், நகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும், நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், 14வது வார்டில் தேக்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாடை கட்டி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம் நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நகர செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.இதில் நகரக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கோபு, வேதரெத்தினம், செல்வம், சிவசாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: