பெரம்பலூர்,பிப்.25: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் பாதுகாப்பாக இருப்பதற்கு வழிமுறைகளை எடுத்துரைக்கவும் காவல் துறையினர் கிராமங்களை நோக்கிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய புதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளார். இதன்படி பெரம்பலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கவுல்பாளையம் கிராமத்தில் பெரம்பலூர் காவல் நிலையம் சார்பாக, கிராம விழிப்புணர்வுக் கூட்டம் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் நடத்தப்பட்டது. அதில் கவுல்பாளையம் கிராமப் பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது கிராமத்தில் அருகிலுள்ள கல்குவாரிக்கு தினமும் சரக்கு லாரிகள் அளவுக்கு அதிகமாக காலையில் வந்து செல்வதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்துவதாக இருப்பதாகவும், அதனை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். குழந்தைக ளுக்கு என தனியாக மீட்டிங் நடத்தியதில் குழந்தைகள் தங்களுக்கு அப்பகுதியில் விளையாட்டு மைதானம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.