குன்னூர், பிப்.25: அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி கணவரை இழந்து வாழ்ந்து வந்த மூதாட்டியின் வீட்டினை கன்டோன்மென்ட் அதிகாரிகள் இடித்து சென்றனர் கன்டோன்மென்ட் பகுதியில் கூரை வீடுகள் கட்டவோ சிமென்ட் தளங்கள் அமைக்கவோ ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. கட்டிடங்கள் மற்றும் வீடுகள் கட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்ற பிறகு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடுத்தர மக்கள் அனுமதி பெறாமல் வீடுகளை புனரமைப்பு மற்றும் கால்நடைகளுக்கு தொழுவம், கழிப்பிடங்கள் அமைத்துள்ளனர். இது போன்ற அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி வருவதாக கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர் இதில் கன்டோன்மென்ட் நிர்வாக கவுன்சிலர்களின் வீடுகள் முதல் 32 வீடுகளில் அனுமதியின்றி வீடுகள் கட்டி வந்துள்ளது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி பூஜா பளிச்சா உத்தரவின் பேரில் ஒரே நேரத்தில் ஏழு வார்டுகளில் வீடுகளை இடிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.