தேவகோட்டை, பிப். 25: தேவகோட்டையில் ஆபத்தான முறையில் உள்ள தண்ணீர் நிரம்பிய பள்ளத்தை உடனே மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேவகோட்டை அரசு மருத்துவமனை அருகில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இத்தொட்டியின் மெயின் வால்வு பழுதாகி சீர்செய்தனர். இதற்காக 10 அடிக்கும் மேல் ஆழமாக ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி அதிலிருந்த கான்கிரீட்டை அகற்றி அதற்கு கீழேவுள்ள வால்வை கழற்றி மாற்றினர். பணி முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் தற்போது சரிசெய்யப்பட்ட வால்வில் இருந்து குடிநீர் கசிந்து கிணறு போல் தண்ணீர் நிரம்பி கிடக்கிறது. மேலும் அருகிலுள்ள வால்விலும் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது.