ராசிபுரத்தில் திமுக பொதுக்கூட்டம்

ராசிபுரம். ஜன.29: ராசிபுரம் நகர திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், ராசிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர்கள் நம்பிராஜா, முனுசாமி உள்ளிட்டோர் பேசினர். இலக்கிய அணி ரங்கசாமி, மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், நகர இளைஞரணி கார்த்தி, பஞ்சாயத்து தலைவர் அருள், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: