கல்லூரி மாணவர்களின் என்.எஸ்.எஸ். முகாம்

பந்தலூர், ஜன. 29:  பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் தாளூர் கலை மற்றும் அறிவியல்  கல்லூரி  என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் முகாம் நடைபெற்றது. சேரம்பாடி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள முட்புதர்கள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. முகாமை கல்லுரி முதல்வர் துரை துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ். அலுவலர்கள் உஷேன் மற்றும் ராதிகா, மக்கள் தொடர்பு அலுவலர்கள் உம்மர், ஏகாம்பரம் என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: