தொடர் மழையால் புதன்சந்தையில் ஆடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், டிச.5: தொடர்மழை காரணமாக, நாமக்கல் புதன்சந்தையில் ஆடுகள் விலை சரிந்தது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் புதன்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள், குட்டிகள், கிடா விற்பனைக்கு வரும். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவார்கள்.  தற்போது மழை பெய்து தீவனம் தட்டுப்பாடின்றி கிடைப்பதால், வளர்ப்பு ஆடுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 நேற்று கூடிய சந்தையில், அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.

 சபரிமலை சீசனையொட்டி, பொதுமக்களிடையே இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக ஆடுகள் விலை குறைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடைகொண்ட இறைச்சி ஆடு ₹4,500க்கு விற்பனையானது. இந்த வாரம் ₹4,300க்கு விற்பனையானது. கடந்த வாரம் ₹4,700க்கு விற்பனையான வளர்ப்பு ஆடுகள் இந்த வாரம் ₹4,600க்கு விற்றது. பிறந்து ஒருமாதமேயான பெண்குட்டி ஆடு மற்றும் கிடாக்குட்டி ₹1000 என விற்பனையானது.

Related Stories: