வாணியம்பாடி, டிச.5:வாணியம்பாடி பஸ்நிலையத்தில் பொதுக்கழிப்பிடத்தை நகராட்சி நிர்வாகம் முள் போட்டு மூடி வைத்துள்ளதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளனர்.வாணியம்பாடி பஸ்நிலையத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பஸ்களில் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பயணிகளின் பயன்பாட்டுக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ்நிலையத்தில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.இந்த கழிப்பிடத்தை பயணிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முள் போட்டு மூடப்பட்டது. எனவே, பஸ்நிலைய வளாகத்தில் ஆங்காங்கே பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் பஸ்நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, தொறுநோய் பரவும் வகையில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதனால், பஸ்நிலையத்தில் பயணிகள் மூக்கை பிடித்தபடி நிற்கின்றனர். இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம்தான் பொதுக்கழிப்பிடத்தை முள் போட்டு மூடி வைத்துள்ளதாக பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.