காளையார்கோவில், நவ.19: காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள நிழற்கூடத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் பயணிகள் மீது விழும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் மதுரை, தொண்டி, காரைக்குடி, பரமக்குடி பேருந்துகள் நிற்கும் இடத்தில் உள்ள நிழற்கூடத்தின் மேல் பகுதியில் பல்வேறு வர்த்தகர்கள் விளம்பர போர்டுகள் வைப்பதற்கு இரும்பு ஆங்கில் அமைத்து அவற்றில் விளம்பரப் பலகைகளை கட்டிவைத்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன் வைக்கப்பட்ட விளம்பரப் போர்டுகள் கிழிந்து தொங்கிக் கெண்டு உள்ளது. மேலும் இரும்பு கம்பிகளும் துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. தற்போது பேனர்களால் ஏற்படும் விபத்தில் உயிர்சேதம் நடந்து வரும் நிலையில் காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் இதுபோன்ற பேனர்கள் இருப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.